ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவிடம் ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தைத் திறந்து வைக்க, பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி, சிறப்பான ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது.