மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரம் நடைபெறும். இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.