நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்த, ஐந்து தமிழக அமைச்சர்கள் புதன்கிழமை (ஜூலை 19) இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரை, தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்த உள்ளனர்.