சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறையில் தியாகராஜன் மிக முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். சென்னையில் தியாகராஜனுக்கு சொந்தமான 3 நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை பல மணி நேரமாக நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. நெடுஞ்சாலைத் துறை கடந்த 6 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது குறிபிடத்தக்கது. சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து தியாகராஜனும் சிக்கியுள்ளார்.