சென்னை: சென்னையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் இருந்து திடீரென ஓ.பன்னீர் செல்வம் வெளியேறியுள்ளார்.
எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகியதை அடுத்து ஓ.பி.எஸ். அணி அவசர ஆலோசனை நடத்தினர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மைத்ரேயன், கே.பி முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென ஓ.பன்னீர் செல்வம் வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏன் வெளியேறினார். எங்கு புறப்பட்டு சென்றார் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.