எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

ஓ. பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி இன்று காலை சேலத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் எடப்பாடி அணியில் இணைந்தார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

சேலம்:  ஓ. பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி இன்று காலை சேலத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் எடப்பாடி அணியில் இணைந்தார்.

தொகுதி பிரச்னையால்தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தேன் என்று ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் இரு அணிகளும் விரைவில் ஒன்றாக இணைந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவர் நேற்று முன்தினம் அந்த அணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஆளும் கட்சியினரின் மிரட்டல் காரணமாக வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ, தங்கள் அணியிலிருந்து விலகி இருக்கலாம் என மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செம்மலை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com