ஆந்திரத்திலிருந்து தண்ணீரை பெறக் கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை பெற உத்தரவிட கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை பெற உத்தரவிட கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சந்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கம் போல் திங்கள்கிழமை வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி. சூரியபிரகாசம், 'தமிழகம் -ஆந்திரம் இடையேயான ஒப்பந்தப்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 12 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து வழங்க வேண்டும். ஆனால், போதிய நீரை ஆந்திர மாநிலம் வழங்கவில்லை. நிகழாண்டில் ஆந்திரத்தில் பருவமழை நன்கு பெய்துள்ளதால், கிருஷ்ணா மற்றும் ஸ்ரீசைலம் அணை முழுவதும் நிரம்புபி வழியும் நிலையில் உள்ளன. அதேசமயம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வற்றிவிட்டன. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, தமிழக அரசின் உயரதிகாரிகள் அடங்கிய குழு ஆந்திர மாநிலம் சென்று சாய் கங்கா கால்வாயிலிருந்து குறைந்தபட்சம் 5 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்துக்கான உரிய தண்ணீர் பங்கீட்டை பெற தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரினார்.
ஆனால், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. ஆகையால், இந்த வழக்கை திங்கள்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பிற வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com