தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்பெட்டியில் 'திடீர்' தீ!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்பெட்டியில் இன்று மதியம் 'திடீர்' என தீபற்றிக் கொண்டது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்பெட்டியில் இன்று மதியம் 'திடீர்' என தீபற்றிக் கொண்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 11-ஆவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்றில், இன்று மதியம் 'திடீர்' என தீப்பற்றிக் கொண்டது.
இந்த ரயிலானது அவசர கால் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் ரயிலாகும். தீ பற்றியதற்கு மின்சார கசிவே காரணம் என்று கூறப்படுகிறது.
பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.