சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று தான் நம்புவதாக முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் பழனிசாமி.
அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே சட்ட சிக்கல் ஏற்படாமல் அந்த விவகாரத்துக்கு தீர்வு காண முயன்று வருகிறோம். தமிழக மாணவர்களின் நலன் காக்க கவனமாகவே செயல்பட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.