சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியைத் தூர்வாரும் விவகாரத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார திமுகவினருக்கு தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மு.க .ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி அனுமதியளித்தார்.
இதையடுத்து, இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் கட்சராயன் ஏரியை திமுகவினர் தூர்வாரியதை அடுத்து, அந்த ஏரியை மு.க. ஸ்டாலின் பார்வையிட காவல்துறையினர் அனுமதி மறுத்து, கைது செய்தனர். இதையடுத்து ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.