நீட் தேர்வை கைவிடக் கோரி சாலை மறியல்: சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
நீட் தேர்வை கைவிடக் கோரி சாலை மறியல்: சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சென்னை பாரிமுனையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500க்கு அதிகமான மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீட் தேர்வை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன் நீட் தேர்வு விவகாரத்தில் மத்தய அரசுக்கு மாநில அரசு உரிய அழுத்தம் தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வு முறையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் தமிழக அரசின் 2 தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை வாங்கி தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com