சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரானது, கருணாநிதி முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபையில் அவரது வைர விழா இரண்டையும் சேர்த்து நாளை சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு மாபெரும் கூட்டம் நடைபெறுகிறது.
உடல் நாளாக குறைபாட்டால் கருணாநிதி இந்த விழாவில் பங்குபெறவில்லை. இந்த விழாவுக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார். அவர்களுடன் இந்த விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இந்நிலையில் சட்டப்பேரவை வைர விழா சிறப்பு மலரை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியிடம் இன்று மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காண்பித்தார். உதவியாளர் ஒருவர் ஒவ்வொரு பக்கங்களாக புரட்டிக் கட்டுவதை கருணாநிதி பார்த்து ரசித்தார். அப்போது, ஸ்டாலின் மற்றும் கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன் உடன் இருந்தார்கள்.
இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.