கடலூர்: சென்னை - நாகை சென்ற பேருந்தில் பயணம் செய்த நாகூர் ஜலால் என்பவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து நாகை சென்ற பேருந்தில் பயணிக்கும் நாகூர் ஜலால் என்பவர் ஹவாலா பணம் ரூ.20 லட்சம் எடுத்துச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து கடலூர் ஆள்பேட்டை சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீஸார் சோதனை செய்ததில் நாகூர் ஜலால் என்பவரிடம் இருந்த ரூ.20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சமும் ஹவாலா பணமா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.