காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புறத்தில் நின்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணத்த 12 வயது சிறுமி, முதியவர் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.