தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது கேள்விக்குறி: மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடும் வரை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என
ஈரோடு: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடும் வரை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள காரப்பாறையில் திமுக சார்பில் 10 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவை கூடும் வரை எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது கேள்விக்குறி என்று தெரிவித்துள்ளார்.