சென்னை: சட்டப்பேரவையை தற்போது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரவையை கூட்ட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய பிறகே தற்போது ஜூன் 14-இல் பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட உடனேயே பேரவையை கூட்டியிருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.