திருச்சி: கட்சி பணத்தை இரண்டரை கோடி ரூபாயை மோசடி செய்ததாக திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சொத்துக்களைப் பாதுகாக்கவும், மீட்கவும் கமிட்டி அமைக்கப்படும் என கூறி தனிகமிட்டியும் அமைத்துள்ளார்.
8 பேர் அடங்கிய இந்த கமிட்டியானது, மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஆய்வு நடத்தப்பட்டபோது, திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாநகர மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், கடந்த 2004ம் அண்டு முதல் இதுவரை, சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.