சட்டப்பேரவையில் பெரும்பான்மை பிரச்னை வந்தால் திமுகவுடன் ஆலோசிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக, காங்கிரஸின் ஆதரவை கேட்டால் அரசை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசு செயல்படாமல் தேக்க நிலையில் உள்ளது. அரசு எத்தனை நாட்கள் இருக்கும் என்பது அதிமுக எம்எல்ஏக்கள் கையில் உள்ளது. ராகுல்காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.
மேலும் கருணாநிதி சட்டப்பேரவை வைர விழா குறித்த பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதில் அளிக்கையில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு 17 வயது, தமிழிசைக்கு 13 வயது என்று கூறினார்.