தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 21-ஆம் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்ரல் 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால் விடுமுறைக் காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.
வெயிலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படும் என அந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகள் அறிவித்தபடி புதன்கிழமை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com