உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி 3 பேர் பலி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே

உளூந்தூர்பேட்டை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com