உளூந்தூர்பேட்டை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.