மீன்பிடிப் படகு - கப்பல் மோதல்: குமரி மீனவர் உள்பட 3 பேர் சாவு

கேரள மாநிலம், கொச்சி அருகே மீன்பிடிப் படகு மீது கப்பல் மோதியதில் குளச்சல் மீனவர் உள்ளிட்ட 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், கொச்சி அருகே மீன்பிடிப் படகு மீது கப்பல் மோதியதில் குளச்சல் மீனவர் உள்ளிட்ட 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடியைச் சேர்ந்த நேவில், எர்னிஸ் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகு மூலம் 14 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்தப் படகில் குளச்சல், வாணியக்குடி, மிடாலம் மீனவர்கள் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களும் இருந்தனர்.
அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பனாமா நாட்டைச் சேர்ந்த கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது. இதில் படகு உடைந்து சிதறியது.
இந்த விபத்தில் படகில் இருந்த 14 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில் குளச்சலைச் சேர்ந்த மீனவர் ஆண்டனிஜான் (57) கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர்.
கடலில் தத்தளித்த மற்ற 11 மீனவர்களையும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் மீட்டு கொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீனவர்களின் படகு மீது மோதிய பனாமா நாட்டு கப்பலை இந்தியக் கடல் படையினர் மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com