சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் வங்கதேசத்தை சேர்ந்த முகமது என்பவர் பிடிபட்டார்.
கரையிலிருந்து 13 கி.மீ., தொலைவில் உடலில் ஆடையின்றி சந்தேகம்படும்படி நீச்சலடித்துக்கொண்டிருந்த அந்த நபரை நடுக்குப்பம் மீனவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவருடன் மேலும் சிலர் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து அவரிடம் பலகோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.