கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தையை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர்.
அடையாம் தெரியதா யாரோ 8 மாத குழந்தையை திருநாகேஸ்வரம் சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையோரத்தில் அநாதையாக கிடந்த 8 மாத குழந்தையை அப்பகுதியில் பொதுமக்கள் மீட்டனர்.
இதையடுத்து அந்த குழந்தை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.