தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் உச்சிமாகாளி முன்னிலை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
போலீஸார் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினாó. இதைத் தொடர்ந்து நுழைவுவாயில் அருகே சிறிது நேரம் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மாநிலத் தலைவர் மாரியப்பன் கூறியது: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எதுவும் வசூல் செய்யவில்லை. எனவே, தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.