சென்னை: சென்னை அடையாறு பெசன்ட்நகரில் உள்ள டிடிவி.தினகரனில் இல்லத்தில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், ஆம்பூர பாலசுப்பிரமணியும் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் ஆசோலனையில் பங்கேற்றுள்ளனர்.
பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்துவரும் நிலையில் எம்எல்ஏக்கள் தினகரனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினகரனுக்கு ஆதவு தெரிவித்து வரும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் விதிப்பதாகவும், அதுகுறித்து தினகரனுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.