தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 105 டிகிரி வெயில் பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கொடைக்கானலில் 10.9 மி.மீ.,மழை பதிவானது. திருச்சி, குன்னூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றனர்.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
பாளையங்கோட்டை 105
திருச்சி 104
கரூர் பரமத்தி 103
திருத்தணி 102
மதுரை, சேலம், தொண்டி, வேலூர் 100