திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான 5 கிலோ கேட்டமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.