மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நரிக்குறவர்கள் சாலை மறியல்: தீக்குளிக்க முயற்சி

புதுவை அடுத்த மதகடிப்பட்டில் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி நரிக்குறவர்கள் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை அடுத்த மதகடிப்பட்டில் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி நரிக்குறவர்கள் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.  தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

மதகடிப்பட்டில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு பல ஆணóடுகளாக நூற்றுக்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்காலனியை ஒட்டிய பகுதியில் புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே நரிக்குறவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அப்படியும் எந்த பலனும் இல்லை. மதுக்கடையை திறந்து விட்டனர். 

இதனால் கொதிப்படைந்த நரிக்குறவர்கள் விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் எவரும் அப்பகுதியில் வராததால் சிலர் தீக்குளிக்க முயன்றனர். தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மதுக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால், நரிக்குறவர்கள் தங்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com