சென்னை: சட்டப் பேரவையில் இன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசினார்.
தடைக்கு எதிராக மேகாலயா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
மேலும், மக்களின் விருப்பம், கோரிக்கையை என்னவோ அதனை ஏற்று அரசு அதனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மூன்று அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.