ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதமானது.
ஈரோட்டில் இருந்து சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈரோடு ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து ரயில் முழுவதும் வெடிகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து பதிவான செல்போன் எண்ணைக் கொண்டு, அதே ரயிலில் பயணம் செய்த பல்லடத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் ரயில்வே போலீஸார்.