குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருணாஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருணாஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மரியாதை நிமித்தமாக தினகரனை சந்தித்து பேசினேன். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டிடிவிடம் ஆலோசிக்கவில்லை. திருவாடானை தொகுதியில் போட்டியிட என்னை சிபாரிசு செய்தவர் சசிகலா. எனவே அவர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். 

உடல்நிலை சரியில்லாததால் முதல்வர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பாஜக வேட்பாளருக்கு எதிராக தமீமுன் அன்சாரி எடுத்தது அவரின் தனிப்பட்ட முடிவு இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com