முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஜூன் 22) மாலை தில்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி சார்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவரை நேரடியாகச் சந்தித்து கட்சியின் ஆதரவை முதல்வர் தெரிவிக்க உள்ளார்.
பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.