அங்கன்வாடியில் ஆங்கில வழிக்கல்வி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அங்கன்வாடியில் ஆங்கில வழிக் கல்விக்கு வகை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அங்கன்வாடியில் ஆங்கில வழிக் கல்விக்கு வகை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் ரங்கநாதன் துணைக் கேள்வி எழுப்பினார். தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், அரசே மழலையர் பள்ளிகளைத் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர், கடன்களை வாங்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அரசே அங்கன்வாடியில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com