கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் கனிமொழிமதி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். தமிழக கலாசாரத்தை பாதுகாப்பது அரசின் கடமை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் இவ்விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறக் கூடாது என்று கூறினர்.

அப்போது கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. பணிகள் முடிந்த பின் அருங்காட்சியகத்தில் பொருட்கள் வைக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்து விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com