தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம்

மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் படகில் 8 பேர் கோடியக்கரைக்கு கிழக்கே அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது படகையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவதால் அதிகரிப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com