தம்பிதுரையின் பேட்டி அதிர்ச்சி தருகிறது என்று அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் சொந்த கருத்துகள் முதல்வருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என முதலில் கூறியவர் தம்பிதுரை.
ஆனால் அவரின் முன்னுக்கு பின்னான பேச்சுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சசிகலாவின் அறிவுரைப்படி பாஜகவுக்கு ஆதரவு என்ற கருத்து புண்படுத்துகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.