பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரறிவாளன் பரோல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸடாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் அதேபோல் பேரறிவாளனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பேரறிவாளன் பரோல் குறித்த அறிக்கை இன்றுதான் வழங்கப்பட்டுள்ளது என்பதால் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். 

இதனிடையே சட்டப்பேரவையில் பேரறிவாளன் பரோல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த மு.க. ஸ்டாலினை சந்தித்து அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com