குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு ஏன்? ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று விளக்கம் அளித்துள்ளார். 
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு ஏன்? ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ அதே முடிவை 3 அணிகளும் எடுத்துள்ளன. 

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திரடம் மனு அளித்துள்ளோம். மனு மீதான பதிலை பொறுத்த முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் வரும் என ஸ்டாலின் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com