ஆரோவில் மாத்ரி மந்திரில் அமித்ஷா தியானம்

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரான ஆரோவில்லில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சுற்றிப் பார்த்தார். 

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரான ஆரோவில்லில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சுற்றிப் பார்த்தார். பின்னர் அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் மேற்கொண்டார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 110 நாள்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாஜகவை பலப்படுத்தும் வகையில் அமித்ஷா சென்று வருகிறார். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக புதுச்சேரிக்கு 2 நாள்கள் பயணமாக வந்த அவர் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குறிப்பாக கட்சிநிர்வாகிகளுடன் சந்தித்தார். அவரை முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்தனர்.

ஜிப்மர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஆரோவில் சர்வதேச நகருக்கு சென்றார். அங்கு பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த பின், மாத்ரி மந்திரில் தியானம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com