பழனியைச் சேர்ந்த சிவா (27), அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு சனிக்கிழமை இரவு திரும்பிச் செல்லும்போது பாம்பார் புரம் பசுமை பள்ளத்தாக்கு சாலையில் மழை பெய்துள்ளது.
இதனால் இருவரும் அப்பகுதியில் உள்ள மரத்திற்கு அருகில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அவ்வழியே காட்டெருமைகள் கூட்டமாக வந்துள்ளன. அதில்,ஒரு எருமை மழைக்கு ஒதுங்கி நின்ற சிவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அங்கிருந்த பொது மக்கள் காட்டெருமையை விரட்டி னர்.