காவேரிபாக்கம் அருகே பெயின்டர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 20ஆயிரம் ரொக்கம் ஆகி யவற்றை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர்.
காவேரிபாக்கத்தை அடுத்த பாணாவரம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெயின்டர் செல்வம் (48). இவரது மனைவி அம்மாயி (40). இவர்கள் இருவரும் கடந்த 25}ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவு வீடு திரும்பிய போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.