தமிழ்நாடு
பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்: இரு பெண்கள் சாவு
மாமல்லபுரம் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உஷா (38), முருகம்மாள்((35) ஆகியோர் பேருந்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை
காத்திருந்தனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் உஷா, முருகம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அங்கு நின்ற ராமு (20) பலத்த காயமடைந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.