பெரியபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில் கல்லூரி மாணவி பிரியா என்கிற பிரியதர்ஷினி (19) உயிரிழந்தார்.
பெரியபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த ரவியின் மகளான இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் தனது தம்பி தேவாவுடன் பைக்கில் செல்லும்போது ஆரணியில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி பிரியா அதே இடத்தில் இறந்தார்.
லேசான காயங்களுடன் தேவா உயிர் தப்பினார். விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுரைக் கைது செய்தனர்.