புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஹைடிரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பக்கத்தில் உள்ள கிராமமக்களும் போராட்டம் செய்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கோட்டைக்காடு கிராம மும் இதில் அடக்கம்.
இந்நிலையில் கோட்டைக்காடு கிராம போராட்ட குழுத் தலைவர் ஆரோக்கியத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சு வார்தையின் முடிவில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆரோக்கியம் அறிவித்தார்.