சென்னை: முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு விவகாரங்களில் தங்கள் கட்சியின் இயலாமையை மறைக்கதான் அதிமுகவை ஸ்டாலின் வசைபாடுகிறார் என்று அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
முல்லைப்பெரியாறு மற்றும் கச்சத்தீவு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை அதிமுக காவு கொடுத்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.
தங்கள் கட்சியின் இயலாமையை மறைப்பதற்காக அதிமுகவை ஸ்டாலின் வசைபாடி வருகிறார்.
இவ்வாறு தினகரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.