ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு 

வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு 

சென்னை: வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல்நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக , ஓபிஎஸ் தலைமையிலான அதிருப்தி அணி வேட்பாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பேரவை சார்பாக தீபா ஆகியோர்  போட்டியிட உள்ளனர்.    

இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்; தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் தேர்தலில் போட்டியிவார் ' என்று  விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com