ஓபிஎஸ் அணியினர் இன்று மாலை மக்கள் நலக்  கூட்டணி தலைவர்களுடன் சந்திப்பு!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்க ள் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் அணியினர் இன்று மாலை மக்கள் நலக்  கூட்டணி தலைவர்களுடன் சந்திப்பு!

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்க ள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி, தேமுதிக மற்றும் தீபா தலைமையிலான எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உள்ளிட்டவை களமிறங்க உள்ளன.

தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை நேற்று காலை விஜயகாந்த் அறிவித்தார். திமுக செயல் தலைவரான ஸ்டாலின் ஜனநாயக சக்திகள் திமுகவுக்கு இந்த இடைத் தேர்தலில்   ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பானது தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com