சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு:
தமிழகத்தில் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமமாக்கபப்டுகிறது. அதேபோல் வாகனப் பதிவின் பொழுது பதிவு செய்பவரின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.