50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே. ஆர்.கே. நகரில் இதுவரை பெறாத வெற்றியை திமுக பெறும்.
விவசாயிகளின் தில்லி, நெடுவாசல் போராட்டங்களுக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பதவியையும், நாற்காலியையும் தக்க வைத்துக் கொள்ளவே மாநில அரசு நினைக்கிறது என்றார்.