கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஐஸ்டின் என்பவரின் படகு திடீரென பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து படகை பழுது செய்வதற்கான வேலைகளில் மீனவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 10 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்த தமிழக மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.